ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதுரை மாவட்டம், மேலுாரைச் சேர்ந்தவர், கதிரேசன். இவரது மனைவி, மீனாட்சி. இவர்கள், நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவர், எங்களுக்கு பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என, மேலுார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ், நான் தான் அவர்களின் மகன் என்பதற்கு, ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. மேலுார் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். அந்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், தனுஷுக்கு, நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற கிளையில், அங்க அடையாள சோதனை நடந்தது. இந்நிலையில், கதிரேசன் தம்பதி, உண்மையான பெற்றோரை கண்டுபிடிக்க, எங்களுக்கும், தனுஷுக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என, மனு தாக்கல் செய்துள்ளனர். இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தனுஷூக்கு எடுக்கப்பட்ட அங்க அடையாள சோதனைகள் குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. தனுஷ் தொடர்பான வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற கிளையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் வழக்கை ஒட்டுமொத்தமாக மார்ச் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.