ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஒரே நிகழ்ச்சியை ஒரே தொகுப்பாளர் 10 ஆண்டுகள் தொகுத்து வழங்குவது சின்னத்திரையில் ஒரு சரித்திர சாதனை தான். பெப்சி உமாவுக்கு பிறகு அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பவர் ஸ்ரீதேவி. 18 வயதில் நிகழ்ச்சிக்குள் வந்தவர் இன்று 28 வயதை தொட்டிருக்கிறார்.
ஜெயா டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிதான் அது. காலை 9 மணிக்கும், இரவு 10 மணிக்கும் ஸ்ரீதேவி தொகுத்து கொடுக்கும் பழைய பாடல்களை கேட்காமல் யாரும் அன்றைய நாளை துவங்குவதுமில்லை. முடிப்பதும் இல்லை. பழைய பாடல்களின் பின்னணி, பாடல் பிறந்த விதம். அதன் சிறப்பு என ஸ்ரீதேவியின் விளக்கத்திற்கு பிறகு அந்த பாடலை கேட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று அவரது சிறப்பு பாடல்கள் ஒளிபரப்பாகும். அது முன்னமே பதிவு செய்யப்பட்டு அவரது பார்வைக்கு போகும். இதனை ஸ்ரீதேவிதான் ஒவ்வொரு ஆண்டும் தொகுத்து வழங்கினார். ஒரு ஆண்டு சில காரணங்களால் ஸ்ரீதேவியால் தொகுக்க முடியாமல் போக வேறு ஒரு தொகுப்பாளினியை கொண்டு தொகுத்து ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பினார்கள். அதை திருப்பி அனுப்பிய ஜெயலலிதா ஸ்ரீதேவியை கொண்டு நிகழ்ச்சி தயாரித்து அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு சேனலில் ஸ்ரீதேவியின் ரேன்ஞ்சே தனி.