Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்-இங்கிலாந்து ராணி சந்திப்பு: மருதநாயகத்துக்கு மீண்டும் உயிர் வருமா?

02 மார், 2017 - 14:01 IST
எழுத்தின் அளவு:
Did-Maruthanayagam-will-come-to-live.?

கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டு கமல், இந்தப் படத்தை துவக்கினார். அப்போது இங்கிலாந்து மகராணி எலிசெபத் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 20 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படம் நின்று விட்டது. ஆனால் அந்த கனவு படம் கமல் மனதில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்மீரா, ஆஸ்கர் நிறுவனங்கள் உதவியுடன் கமல் மீண்டும் மருதநாயகத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது.


தந்போது முன்னணி நிறுவனமாக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 500 கோடி. இந்த 500 கோடிக்கான வியாபார வழியை கமல் காட்டினால் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.


இந்த நிலையில்தான் கமல் இங்கிலாந்து ராணி எலிசெபத்தை சந்தித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கலாச்சார வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரமுகர்களில் கமலும் ஒருவர். இந்த நிகழ்வின்போது கமல் ராணி எலிசபெத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக கமல் கூறியதாவது...


கலாச்சார விழாவில் ராணி எலிசபெத்தை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். மருநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்ததை ராணிக்கு நினைவுபடுத்தினேன். ராணி எலிசபெத் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் சந்திப்பும், உரையாடலும் சிறிய அளவிலேயே இருந்தது என்று கமல் கூறியுள்ளார்.


"இந்தியா-இங்கிலாந்து கலாச்சார ஒருங்கிணைப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வளர்ந்திருக்கிறது. இரு நாடுகளுமே கலாச்சார ரீதியாக நெருங்க விரும்புகிறது. கமலின் மருநாயகம் படம் இந்த கலாச்சாரத்துக்கு உதவும். காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சியும், மருதநாயகத்தின் போராட்டமும் தான் கதை. அதனால் இந்தியா இங்கிலாந்து கூட்டுத் தயாரிப்பாக மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படலாம்" என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in