ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997ம் ஆண்டு கமல், இந்தப் படத்தை துவக்கினார். அப்போது இங்கிலாந்து மகராணி எலிசெபத் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். 20 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக படம் நின்று விட்டது. ஆனால் அந்த கனவு படம் கமல் மனதில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. சாய்மீரா, ஆஸ்கர் நிறுவனங்கள் உதவியுடன் கமல் மீண்டும் மருதநாயகத்தை உருவாக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்தது.
தந்போது முன்னணி நிறுவனமாக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. படத்தின் பட்ஜெட் 500 கோடி. இந்த 500 கோடிக்கான வியாபார வழியை கமல் காட்டினால் படத்தை தயாரிக்க தயாராக இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளதாம்.
இந்த நிலையில்தான் கமல் இங்கிலாந்து ராணி எலிசெபத்தை சந்தித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கலாச்சார வரவேற்பு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற பிரமுகர்களில் கமலும் ஒருவர். இந்த நிகழ்வின்போது கமல் ராணி எலிசபெத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக கமல் கூறியதாவது...
கலாச்சார விழாவில் ராணி எலிசபெத்தை சந்தித்தேன். அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார். மருநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்ததை ராணிக்கு நினைவுபடுத்தினேன். ராணி எலிசபெத் கலந்து கொண்ட ஒரே படப்பிடிப்பு என்னுடைய படப்பிடிப்புதான். கூட்டம் அதிகமாக இருந்ததால் எங்கள் சந்திப்பும், உரையாடலும் சிறிய அளவிலேயே இருந்தது என்று கமல் கூறியுள்ளார்.
"இந்தியா-இங்கிலாந்து கலாச்சார ஒருங்கிணைப்பு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது வளர்ந்திருக்கிறது. இரு நாடுகளுமே கலாச்சார ரீதியாக நெருங்க விரும்புகிறது. கமலின் மருநாயகம் படம் இந்த கலாச்சாரத்துக்கு உதவும். காரணம் ஆங்கிலேயர்களின் ஆட்சியும், மருதநாயகத்தின் போராட்டமும் தான் கதை. அதனால் இந்தியா இங்கிலாந்து கூட்டுத் தயாரிப்பாக மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படலாம்" என்கிறார்கள் சினிமா பார்வையாளர்கள்.