ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் அமலாபால். அப்போது ஏ.எல்.விஜய்- அமலாபாலுக்கிடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு தான் இயக்கிய தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். அதுவரை காதலை மறுத்து வந்த அவர்கள் அந்த படத்திற்கு பிறகு காதலிப்பதை ஒத்துக்கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரே வருடத்தில் ஏ.எல்.விஜய்-அமலாபாலுவின் குடும்ப உறவில் விரிசல் விழுந்தது. அதனால் பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் அவர்களது விவாகரத்து மனு ஏற்றுக்கொள்ளப் பட்டு சட்டப்படி அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதையடுத்து அமலாபால் அடுத்து திருமணம் குறித்து யோசிக்காமல் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ள நிலையில், ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம். இந்த சேதி அமலாபாலின் காதுக்கு வந்ததை அடுத்து சிறிது நேரம் கண்கலங்கியவர், படப்பிடிப்பு தளத்தை விட்டே வெளியேறி விட்டாராம்.