ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளது என நடிகை ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் வாரிசு ஸ்ருதிஹாசன். இசையமைப்பாளர், பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பிஸியான நடிகையாக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். ஸ்ருதி, சென்னையில் ஐஐடி.,யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், ‛‛மேலை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து தான் உள்ளது. தமிழகத்திலும் பெண்களுக்கான பாதுகாப்பில் பெருமளவு குறைபாடு உள்ளது. தண்டனைகளை கடுமையாக்கினால் தான் குற்றச்செயல்களை தடுக்க முடியும்'' என்றார்.