ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு, இந்தாண்டு யாஷ் சோப்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நேற்று நடந்தது. விருதை பெற்று கொண்ட பின்னர் பேசிய ஷாரூக்கான்... ‛‛என்னுடைய 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் என்னுடைய பெரும்பாலான படங்கள் யாஷ் ராஜ் பிலிம் தயாரிப்பாகத்தான் இருக்கும். என்னை அவர், ஒரு மகன் போன்று தான் பாவித்தார். நான் ஒன்றும் அழகான நடிகர் கிடையாது, ரொமான்ட்டிக் ரோலில் நடிக்க ஏற்ற தோற்றமும் என்னிடம் இல்லை. இருந்தாலும் யாஷ் சோப்ரா என்னிடம், நீ ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கவில்லை என்றால் உன் சினிமா பயணம் சிறப்பாக இருக்காது என்றார். அவரது அறிவுரையை ஏற்று, அவர் சொன்னபடி பயணித்தேன், அதற்கான பலனும் கிடைத்தது. என் சினிமா கேரியரில் யாஷ் ராஜ் சோப்ராவின் பங்கு, அவரது தனிக்கவனம் மிக முக்கியமானது'' என்று கூறியுள்ளார்.