ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் மற்றும் ஸ்பைசி கூல் இம்பரெஷன்ஸ் சார்பில் திலீபன், எம்.செங்கோட்டையன் இணைந்து தயாரித்துள்ள படம் களவு. கலையரசன், கருணாகரன், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள். அபிராமி ஐயர் என்ற புதுமுகம் ஹீரோயின். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார். படம் பற்றி இயக்குனர் முரளி கார்த்திக் கூறியதாவது:
கிரைம் - திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் படம். எதிர்பாராத சம்பவங்களால் மூன்று இளைஞர்கள் மற்றும் ஒரு தம்பதிகளின் வாழ்க்கை மாறுகின்றது. இது தான் படத்தின் ஒரு வரி கதை. நம் சமுதாயத்தில் நடைபெறும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம், முழு படமும் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தன்னுடைய நண்பர்களோடு இருக்கும் போது குதூகலமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஐடி ஊழியர் கலையரசன், தன்னுடைய வீட்டிற்கு சென்றவுடன் முழுவதுமாக மாறி விடுகிறார். இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தான் படத்தின் கதை நகருகின்றது. இரவு பணிகளில் வேலை பார்க்கும் ஒரு பிபிஓ நிறுவன ஊழியராக கருணாகரன் நடித்துள்ளார். அவருடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக காணப்பட்டாலும், அதற்கு ஆழமான அர்த்தங்கள் இருக்கும். 22 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். மே மாதம் வெளிவருகிறது. என்றார் முரளி கார்த்திக்.