ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
2017 ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர், இசை வெளியீடு எப்போது நடக்கும் என்ற தகவலை படத்தின் இயக்குனர் ராஜமௌலி தெரிவித்துள்ளார். மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். யு டியுபிலும் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்கள். அந்த மோஷன் போஸ்டர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
படத்தின் பிரமோஷன் வேலைகளையும் நேற்று ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது யு டியூபில் ராஜமௌலி கொடுத்துள்ள சிறப்பு பேட்டியுடன் இந்த பிரமோஷன் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. அதில் படத்தின் டிரைலருக்கான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும், கிராஃபிக்ஸ் காட்சிகளைச் சேர்க்க வேண்டிய பணி இன்னும் முடிவடையாததால், டிரைலரை வெளியிடும் தேதியை அறிவிக்க முடியவில்லை. விரைவில் அது பற்றி தெரிவிப்போம் என ராஜமௌலி கூறியுள்ளார்.
இந்த ஆண்டில் தென்னிந்தியத் திரையுலகத்தில் '2.0' தமிழ்ப் படத்திற்கு முன்னதாகவே வெளிவரும் 'பாகுபலி 2' படம் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.