ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1953-ம் ஆண்டு வெளிவந்த படம் பணக்காரி. இதில் சித்தூர் நாகய்யா ஹீரோவாகவும் டி.ஆர்.ராஜகுமாரி ஹீரோயினாகவும் நடித்தனர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இதில் வில்லன். படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். சி.வி.வி.பந்துலு, மங்களம், உள்பட பலர் நடித்திருந்தனர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசை அமைத்திருந்தார், எஸ்.எஸ்.வாசன் இந்தப் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றினார்.
அன்பான கணவன் மனைவியாக வாழ்கிறார்கள் நாகய்யாவும், டி.ஆர்.ராஜகுமாரியும். நாகய்யா தனது அழகான மனைவியை தனது நண்பனும் ராணு வீரனுமான எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்தி வைப்பார். அப்போது டி.ஆர்.ராஜகுமாரி மீது ஆசை கொள்ளும் எம்.ஜி.ஆர் எப்படியாது கணவன், மனைவியை பிரித்து ராஜகுமாரியை அடைய திட்டமிடுவார். நண்பன் மனைவி மீது ஆசை கொண்டதற்காக எம்.ஜி.ஆர் என்ன தண்டனையை அடைகிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படம் பெரிய தோல்வி அடைந்தது. அழகான எம்.ஜி.ஆர் அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுவதாக நடித்ததை மக்கள் ஏற்கவில்லை. இந்தப் படத்திற்கு பிறகுதான் இனி வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவை எம்.ஜி.ஆர் எடுத்தார்.
இதில் இன்னொரு சுவையான தகவல் உண்டு. பணக்காரி படம் வெளிவந்தபோது பிச்சைக்காரி என்ற படமும் வெளிவந்தது. மலையாள ரீமேக் படமான அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. "பிச்சைக்காரி பணக்காரி ஆனாள். பணக்காரி பிச்சைக்காரி ஆனாள்" என்று அப்போது கிண்டல் செய்வார்களாம்.