சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பருத்திவீரன் படம் ரிலீசாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
"10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பருத்திவீரன் படம் ரிலீசானது. அன்றிலிருந்து இன்று வரை உங்களின் அன்பு என்னுடன் உள்ளது. நான் பல ஏற்றங்களையும், இறக்கங்களை பார்த்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம், உங்களின் அன்பு என்னுடனேயே உள்ளது. அந்த அன்பு தான் என் வாழ்க்கையை அழகாக ஆக்கி உள்ளது. அந்த அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக தொடர்ந்து நான் முழு முயற்சி செய்வேன். உங்களின் அன்புக்கு நன்றி.
கடவுள், குடும்பம், அண்ணா, என் டைரக்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகர்கள், மீடியா நண்பர்கள், பாண்டியன் மாஸ்டர், தியேட்டர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது அருமை ரசிகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி".