ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் அமீரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிவர் முத்து கோபால். இவர் தற்போது தானே சொந்தமாக ஒரு படத்தை தயாரித்து அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் முத்து கோபால் ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
இது திருப்பூரில் உள்ள சாயப் பட்டறை கழிவுகள் அமராவதி ஆற்றில் கலந்து அதன் மூலம் அமராவதி ஆற்று பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அடைந்துள்ள பாதிப்புகள், திருப்பூர், பொள்ளாச்சி, பகுதி மக்கள் எந்த அளவிற்கு சாயக் கழிவுளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை பற்றிய கதை. படத்தை சொந்தமாக தயாரித்த முத்து கோபாலுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படவே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் தனது குரு அமீரிடம் வந்துள்ளார். 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருந்த படத்தை அமீர் போட்டுப் பார்த்தார்.
சமூக அக்கறை கொண்ட படமாகவும் அதே நேரத்தில் ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமாகாவும் படம் உருவாகி இருப்பதை அறிந்தார். அதனால் தன் சிஷ்யன் படத்தை தானே வாங்க முடிவு செய்தார். படத்திற்கு முத்து கோபால் வைத்திருந்த பெயரை மாற்றி கே.பாலச்சந்திரின் குடும்பத்தினர் அனுமதி வாங்கி அச்சமில்லை அச்சமில்லை என்ற பெயர் சூட்டினார். தனே சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.
"இனி சமூக பிரச்சினைகளை பேசும் படங்களில்தான் நடிப்பது, தயாரிப்பது, இயக்குவது என்ற முடிவு செய்துள்ளேன். முத்து கோபாலின் படத்தை பார்த்ததும் அதன் சமூக நோக்கம் பிடித்த்திருந்தது. அதனால் நானே தயாரிப்பாளராகிவிட்டேன்" எனகிறார் அமீர்.