ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கபாலி' படத்தை முடித்த கையோடு பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப்படத்தை நடிகர் தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வந்து மாதங்கள் பல கடந்துவிட்டது. ஆனால் படம் குறித்த வேறெந்த தகவலும் வெளியாகவில்லை.
ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளர்களிடம் சகஜமாக பழகி வந்த பா.ரஞ்சித் கபாலி கமிட்டானதிலிருந்தே பந்தா காட்ட ஆரம்பித்துவிட்டார். அதிலும் குறிப்பாக இரண்டாவது முறையாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஆளே மாறிவிட்டார். அதனால் ரஜினியின் புதுப்படம் குறித்த நகர்வு வெளியே வரவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. அது மட்டுமல்ல, படத்தின் கதாநாயகி குறித்த தகவலும் இப்போது கசியத்தொடங்கி உள்ளன. ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகையான வித்யா பாலனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஏற்கெனவே 'கபாலி' படத்தில் நடிப்பதற்கு வித்யா பாலனிடம் பேசப்பட்டது. அப்போது அவரின் கால்ஷீட் ஒத்துவரவில்லை என்பதால் அந்த வாய்ப்பு ராதிகா ஆப்தேவுக்குச் சென்றுவிட்டது. இந்நிலையில், ரஜினி உடன் நடிக்கும் வாய்ப்பு மீண்டும் வித்யா பாலனை தேடிப்போயிருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பதன் மூலம் இந்தப் படத்திலும் ரஜினிக்கு ஓல்டுகெட்டப் என்பது உறுதியாகியுள்ளது.