ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் 'கத்தி' படத்தில் நாயகியாக நடித்த சமந்தா அந்தப் படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'ஆரண்ய காண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். அப்படத்தின் புகைப்படம் ஒன்றைத்தான் நேற்று சமந்தா அவருடைய டிவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் (விஜய் சேதுபதி ?) பக்கத்தில் கறியை வெட்டும் கத்தியுடன் சமந்தா அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. “தியாகராஜன் குமாரராஜாவின் ரொமான்டிக் காமெடியிலிருந்து...” என அந்தப் புகைப்படத்தைப் பற்றி சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான போது பெண் வேடத்தில் இருக்கும் விஜய் சேதுபதியின் புகைப்படம் வெளியானது. அதன் பிறகு இப்போது சமந்தாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் 'அநீதிக் கதைகள்' என வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஏற்கெனவே பரவியுள்ளது.