ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கிய அவர் அடுத்தபடியாக யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்று கவனிக்கப்பட்டு வந்த நிலையில், மீண்டும் அவர் ரஜினியையே இயக்குகிறார் என்றொரு செய்தியை வெளியிட்டார் தனுஷ். கபாலி படம் வெளியான நேரத்தில் ரஜினி படம் போன்று இல்லை, ரஞ்சித் படமாக உள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தபோதும், ரஜினியை சரியான கதையில் சரியான கோணத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ரஞ்சித் என்று சொன்ன தனுஷ், மீண்டும் ரஜினியை அவர் இயக்கும் படம் கபாலியை மிஞ்சும் பிரமாண்ட படமாக இருக்கும் என்றார்.
மேலும், அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அப்படத்திற்கான வேலைகளில் இறங்கிய பா.ரஞ்சித், அப்படம் மும்பையில் நடக்கும் கதைக்களம் என்பதால் மும்பை சென்று பாட்ஷா படப்பிடிப்பு நடந்த சில லொகேசன்களை பார்த்து விட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படவேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், மே மாதத்தில் ரஜினியின் புதிய படத்தை ரஞ்சித் தொடங்குவார் என்று தெரிகிறது. அதன்காரணமாக தற்போது சென்னை எழும்பூரில் பட அலுவலகம் திறந்துள்ள பா.ரஞ்சித், படத்திற்கு தேவையான நடிகர் நடிகைகள் தேர்வையும் முடுக்கி விட் டுள்ளார். இந்த சேதியறிந்து ரஜினி படத்தில் ஓரிரு சீன்களில் நடித்தாலும் போதும் என்று பெருவாரியான நடிகர் நடிகைகள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டவருகின்றனர்.