ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். சரித்திரத்தையும், இந்தக்காலத்தையும் இணைத்து "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில் படமெடுத்தார் டைரக்டர் செல்வராகவன். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், பெரிய அளவில் சர்ச்சையையும், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.
இதுகுறித்து தனது ட்விட்டர் வலைதளத்தில் செல்வா கூறியிருப்பதாவது, , "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. படத்திற்கான கதை மொத்தமும் தயாராகிவிட்டது. கொஞ்சம் காலம் இடைவெளிவிட்டு இந்தப் படத்தை எடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.