ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பாவனா நேற்று அவரது டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணி பற்றி ஒரு பார்வை...
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனா டிரைவர் தேவை என்று பத்திரிக்கையில் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரத்தை பார்த்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் பாவானவுக்கு மிகவும் நம்பிக்கையானவராக மாறினார். இந்த நிலையில் பாவனாவுக்கு நெருக்கமான ஒரு போலீஸ் அதிகாரி பாவனாவிடம் "உங்களிடம் டிரைவரா உள்ள சுனில் குமார் மீது ஆள்கடத்தல் வழக்கு, கார் திருட்டு வழக்கு உள்ளது. இவரை எப்படி வேலையில் சேர்த்துக் கொண்டீர்கள்?" என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாவனா சுனிலை வேலையிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டார். அதற்கு பிறகு மார்ட்டின் என்பவரை டிரைவராக வேலைக்கு சேர்த்துள்ளார்.
பாவனாவிடம் டிரைவர் வேலை காலியாக இருக்கிறது என்று கூறி மார்ட்டினை பாவனாவிடம் அனுப்பி வைத்ததே சுனில் குமார்தான். இது பாவனாவுக்கு தெரியாது. தன்னை வேலையை விட்டு நீக்கிய பாவனாவை பழிவாங்க திட்டமிட்டு மார்ட்டினை அவரின் டிரைவராக்கி உள்ளான் சுனில்.இருவரும் சேர்ந்து தீட்டிய திட்டத்தை நேற்று அரங்கேற்றி உள்ளனர்.
தற்போது பாவனாக ஹனீபி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் திருச்சூரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இரவு 1 மணியளவில் கொச்சிக்கு காரில் திரும்பினார். காரை டிரைவர் மார்ட்டின் ஓட்டினார். நெடும்பா சேரி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது பின்னால் ஒரு டெம்போ டிராவலில் சுனில் குமார் தனது ஆட்களுடன் பின் தொடர்ந்து வந்துள்ளார். காக்கநாடு அருகே வரும்போது டெம்போ டிராவலை கார் மீது மோதியுள்ளனர். இனால் காரை நிறுத்தினார் மார்ட்டின். அப்போது வேகமாக ஓடிவந்த சுனில் குமாரும், அவரது நண்பர்களும் மார்ட்டினை தாக்கி விட்டு பாவனாவுடன் காரை எடுத்துக் கொண்டு பறந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரம் அவர்களுடன் காருக்குள் போரடியிருக்கிறார் பாவனா. பாவனாவை அவர்கள் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். பின்னர் பாவனாவுடன் காரையும் பாலாரிவட்டம் என்ற இடத்தில் விட்டுவிட்டு வேறொரு காரில் ஏறி தப்பிச் சென்று விட்டார்.