ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல், செண்டிமென்ட், குத்துப்பாட்டு என பலதரப்பட்ட சூழல்களுக்கு பாடல்கள் எழுதியவர் சினேகன். அதோடு, யோகி படத்தில் நடிகராக உருவெடுத்த அவர், உயர்திரு 420 படத்தை அடுத்து தற்போது பொம்மி வீரன் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட இந்த படம் ஹாரர் கதையில் உருவாகி வருகிறது. மேலும், படத்தில் நடித்து வந்த போதும் பாடல் எழுதுவதில் பிசியாக இருந்து வரும் சினேகன், தற்போது கடவுளுக்கு நன்றி -என்ற படத்தில் ஒரு அம்மன் பாடல் எழுதியுள்ளார்.
இந்த படத்தை புதுமுக இயக்குனர் பொன்மகேஷ் இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அவருடன் மெளனிகா, கொட்டாச்சி, புலிப்பாண்டி, சிந்தா, அம்பாணி சங்கர் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பிப்ரவரி 24-ந்தேதி சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற உள்ளது. அப்போது டீசருடன் சினேகன் எழுதிய மாரியம்மன் பாடலும் வெளியிடப்பட உள்ளது.
கதைப்படி ஹீரோ பொன்மகேஷ், எட்டையபுரம் மாரியம்மனிடம் வரம் கேட்கும் சூழலில் அமைந்துள்ள அந்த பாடல், சிவசக்தி மாரியம்மா நவசக்தி மாரியம்மா நலம் தேடிவந்தோமம்மா... என்று தொடங்குகிறது. இந்த பாடலுக்கு மரிய மனோகர் இசையமைத்துள்ளார்.