ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழக அரசியல் நிலவி வரும் பதட்டமான சூழலில் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக அனைவரும் இதை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் தான் உள்ளனர். இது தொடர்பாக நடிகர் சித்த்தார்த் டுவிட்டரில் தனது காட்டமான பதிவை பதிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... ‛‛இந்த நாடும் நாட்டு மக்சகளும் நாசமாய் போகட்டும். இது தான் தற்போதைய மக்களின் நிலை, எதிர்கட்சியாக திமுக., சிறப்பாக செயல்பட்டார்கள். சட்டசபையில் நடப்பதை குழந்தைகள் அனைவரும் பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தநாள் ஜனநாயகத்திற்கே வெட்ககேடானது. அப்படியே சசிகலாவிற்கு சிறையில் ஒரு லேப்டாப் கொடுத்து விடுங்கள், 4 ஆண்டுகளுக்கு இடைப்பாடி கே பழனிசாமிக்கு போக்குவரத்து செலவு (நம்முடைய பணம்) மிச்சமாகும். நமது உணவில் இன்னும் அதிகமான உப்பைப் போட வேண்டிய நேரமிது'' என்று கூறியுள்ளார்.
சித்தார்த் தவிர்த்து இன்னும் சில நடிகர்கள் தங்களது கருத்தை பதிவை செய்திருக்கின்றனர்.
நடிகை ராதிகா : அவமானம், கவர்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடிகர் கருணாகரன் : மக்கள் மன்றம் என்றுமே மன்னிக்காது, மறவாது.