ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெற்றிவேல், கிடாரி ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை நிகிலா விமல். தற்போது ஒன்பது குழி சம்பத் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அவர் தமிழில் நடித்த முதல் படமான பஞ்சுமிட்டாய் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் நிகிலா. அந்த படத்தில் நடித்தபோது அவருக்கு சுத்தமாக தமிழ் தெரியாது என்பதால் தமிழ்பேச கற்றுக்கொண்டு நடித்திருக்கிறார்.
மேலும், இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்துக்கு மனைவியாக நடித்தபோதும் மற்ற நேரங்களில் அவரை அண்ணா என்றுதான் அழைத்தாராம் நிகிலா. அவர் மட்டுமின்றி, நடிகர் சென்ட்ராயன், டைரக்டர் எஸ்.பி.மோகன், தயாரிப்பாளர்கள், உதவி இயக்குனர்கள் என யாரைப்பார்த்தாலும் அண்ணா என்றுதான் அழைத்து வந்திருக்கிறார். அப்போது, படத்தில் எனக்கு மனைவியாக நடிக்கிறாய் அதனால் அண்ணா என்று சொல்ல வேண்டாம், மா.கா.பா.என்று சொல், இல்லையேல் ஆனந்த் என்றாவது சொல் என்று மா.கா.பா.ஆனந்தை சொன்னபோதும், நிகிலா கேட்பதாக இல்லையாம்.
அதுபற்றி நிகிலா கூறுகையில், தமிழ் தெரியாமல் நடிக்க வந்த எனக்கு ஆண்களை அண்ணா என்று அழைக்க வேண்டும் என்று அப்போது தெரிந்தது. அதனால் அப்படி சொன்னேன். தமிழ் மொழியை பேசப்பேசத்தான் அண்ணா என்று யாரை அழைக்க வேண்டும் என்பது புரிந்தது. இருப்பினும், நான்அண்ணா என்று சொல்வதை அனைவருமே விரும்புகிறார்கள். மா.கா.பா.ஆனந்த்கூட எனக்கு ஒரு அழகான தங்கை கிடைத்து விட்டாள் என்கிறார். அது ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார் நிகிலா விமல்.