ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'அஞ்சான்' படத்தை இயக்கி மாபெரும் தோல்வி கண்ட பிறகு அடுத்து படம் இயக்க வாய்ப்பு கிடைக்காமலும், கமல்ஹாசனை வைத்து தயாரித்த 'உத்தம வில்லன்' படத்தின் தோல்விக்குப் பிறகு ஏற்கெனவே எடுத்த படங்களை வெளியிட முடியாமலும், தயாரித்து வரும் படங்களைத் தொடர முடியாமலும் சிக்கலில் சிக்கினார் இயக்குனர் லிங்குசாமி. 'சண்டக்கோழி 2' படத்தை ஆரம்பிப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாக அறிவித்து பின்னர் அதுவும் சிக்கலாகி இப்போது அந்தப் படத்தை இயக்குவதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார் லிங்குசாமி. அதே சமயம், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமாகும் படத்தை பிப்ரவரி மாதம் முதல் இயக்கப் போவதாக ஏற்கெனவே பிரம்மாண்டமான துவக்க விழா நடத்தி அறிவித்திருந்தார்கள்.
சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர ஓட்டலில் அந்த விழா, செப்டம்பர் மாதம் 22ம் தேதி நடைபெற்றது. விழாவில் படத்தைத் தயாரிக்கும் கே.இ.ஞானவேல் ராஜா, இயக்குனர் லிங்குசாமி, அல்லு அர்ஜுன், அவருடைய தம்பி நடிகர் அல்லு சிரிஷ், நடிகர் சிவகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அந்த விழாவில் தமிழிலேயே பேசி விழாவுக்கு வந்திருந்த அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார் அல்லு அர்ஜுன். அவர் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதத்தில் ஆரம்பிப்பதாக சொல்லப்பட்ட அந்தப் படம் தற்போது 'டிராப்' செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அல்லு அர்ஜுன் தற்போது 'துவ்வட ஜகன்னாதம்' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்குப் படமான 'நா பேரு சூர்யா' என்ற படத்தில் ஏப்ரல் மாதம் முதல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட உள்ளார்கள்.
லிங்குசாமி 'சண்டக் கோழி 2' படத்தை இயக்க உள்ளதாலும், அல்லு அர்ஜுன் அடுத்து தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாலும் அவர்கள் இருவரும் இணைவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்ப் படம் இப்போதைக்கு ஆரம்பமாகது என்றே சொல்கிறார்கள்.