ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'விஸ்வரூபம்'. முஸ்லிம் மக்கள் படத்தை எதிர்ப்பதாகக் கூறி அப்போதைய அரசாங்கத்தால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. அந்த வருடத்தின் இறுதியிலேயே படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், நான்கு வருடங்கள் ஆகியும் படம் எப்போது வெளிவரும் என்ற சூழ்நிலையே உள்ளது.
படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் படத்தின் வெளியீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. பலமுறை விரைவில் வந்துவிடும் என்று கமல்ஹாசன் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகினாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதில்லை. இதனிடையே, இன்று டிவிட்டரில் 'விஸ்வரூபம் 2' படத்தின் நிலை என்ன என்பது குறித்து கமல்ஹாசன் தெளிவுபடுத்தியுள்ளார்.
“விஸ்வரூபம் 2 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, நான் தனிப்பட்ட முறையில் அனைத்து வழிகளையும் சரி செய்துள்ளேன். மிகப் பெரிய தடை நீங்கிவிட்டது. சட்டப் பிரச்சனையும், தொழில் நுட்பப் பிரச்சனை மட்டும் இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தற்போது இயக்கி நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பு அவருக்கு ஏற்பட்ட கால் முறிவு பிரச்சனையால் கடந்த ஆறு மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. எப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பை கமல்ஹாசன் ஆரம்பிப்பார் என்று தெரியவில்லை. அதற்குள் 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல்ஹாசன் முயற்சிக்கலாம் என்கிறார்கள்.