ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதியவர்கள் இணைந்து தயாரிக்கும் ஒரு படத்துக்கு கேக்கிறான் மேய்க்கிறான் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அஸ்விகா கிரியேஷன் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சபா, லூப்னா அமீர் என்ற புதுமுகங்களுடன் ஆடுகளம் நரேன், சபீதா ஆனந்த், பிளாக் பாண்டி, மதுமிதா நடிக்கிறார்கள். கார்த்திக் பாலா ஒளிப்பதிவு செய்கிறார், ஆதித்ய மகாதேவன் இசை அமைக்கிறார். படத்தின் தலைப்பு பற்றி இயக்குனர் எஸ்.சாம் இமானுவேல் அளித்த விளக்கம் இது...
ஹீரோவும் அவனது நண்பர்கள் நான்கு பேரும் இணைந்து ஒரு மாடலிங் கம்பெனி ஆரம்பிக்கிறார்கள். பின்னணி இசை முழங்க அழகிகள் ஒய்யார நடைபோட்டு வருவதுதான் மாடலிங். அதற்கு பொருத்தமாகவும், கலோக்கியலாகவும் பெயர் வைக்க விரும்பும் நண்பர்கள் தங்கள் நிறுவனத்துக்கு கேக்கிறான் மேய்க்கிறான் என்று பெயர் வைக்கிறார்கள். இந்த வித்தியாசமான பெயரே அவர்கள் கம்பெனியை பெரிய லெவலுக்கு கொண்டு வருகிறது.
ஒருகட்டத்தில் இந்த கம்பெனியை ஆரம்பித்ததே ஹீரோயின் வீட்டில் ஆட்டையபோட்ட பணத்தை கொண்டுதான் என்பது தெரிய வருகிறது. இதனால் ஹீரோயின் தன் காதலன் ஒரு திருடன் என்ற நினைத்து விலகுகிறாள். ஆனால் நண்பர்கள் செய்ததற்கும் ஹீரோவுக்கும் சம்பந்தம் இல்லை. இதை காதலிக்கு புரிய வைத்து நண்பர்களையும் திருட்டு பழியிலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. சென்னை நாகர்கோவில், கன்னியாகுமரி, பாபநாசம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. இது ஒரு முழுநீள காமெடி படம். என்கிறார் இயக்குனர் இமானுவேல்.