ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தங்கச்சி மீது அளவு கடந்த பாசம் கொண்ட அண்ணனாக பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இமேஜை உருவாக்கக்கொண்டவர் டி.ராஜேந்தர். அதுமட்டுமின்றி கதை திரைக்கதை இசை இயக்கம் பாடல்கள் ஒளிப்பதிவு தயாரிப்பு நடிப்பு என ஓரிரு துறைகள் தவிர அனைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை செலுத்தி அதில் வெற்றியும் பெற்றவர். ஆனால், வீராசாமி படத்திற்கு பிறகு ஒருதலைக்காதல் என்ற படத்தை தொடங்கினார். ஆனால் அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
மேலும், மகனுக்கே குத்துப்பாட்டு பாடிய அவர், இன்னும் சில படங்களிலும் பின்னணி பாடிவந்த நிலையில், அவரை கலாய்த்தே ஜெயம்ரவி நடித்த ரோமியோ ஜூலியட் படத்தில் டண்டனக்கா என்ற பாடல் இடம்பெற்றபோது அதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு, தன்னைத்தேடி காமெடி கேரக்டர்க ளுடன் வந்த டைரக்டர்களிடமும், என்னை வைத்து காமெடி செய்யத்தானே இந்த ஏற்பாடு என்று அந்த வாய்ப்புகளை திருப்பி அனுப்பினார்.
இந்த நேரத்தில்தான் டைரக்டர் கே.வி.ஆனந்த், தனது கவண் படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டருடன் டி.ஆரை தொடர்பு கொண்டாராம். மொத்த கதையையும் கேட்ட அவர், உடனே ஓகே சொன்னதோடு மிகச்சிறப்பாகவும் நடித்துள்ளாராம். அதனால் கவண் படத்திற்கு பிறகு மாறு பட்ட கேரக்டர் நடிகராகவும் ஒரு பெரிய ரவுண்டு வருவார் டி.ஆர்., என்கிறார்கள்.