ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓ.பன்னீர் செல்வத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி தெரிவிக்கவே சென்றேன் என்று கூறியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். தமிழக அரசியல் களம் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாகவே சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சியான அதிமுக.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் ஓபிஎஸ்., ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக தொடர்ந்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். சினிமா கலைஞர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்களான ராமராஜன், தியாகு உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று முதல்வர் பன்னீர் செல்வத்தை சந்தித்தார். இந்த சந்திப்பு அவருக்கு ஆதரவான சந்திப்பாகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் லாரன்ஸோ பன்னீர் செல்வத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛முதல்வர் பன்னீர் செல்வத்தை நான் பார்த்தது அவருக்கு ஆதரவு தெரிவித்தது போன்று செய்தி பரவி வருகிறது. நான் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நன்றி சொல்லவே அவரை சந்தித்தேன். எனக்கு அரசியல் தெரியாது. அது அவர்களின் கட்சி விவகாரம். டான்ஸ் பற்றியோ, தானம் செய்வது பற்றியோ என்னிடம் கேட்டால் நான் சொல்வேன், அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அந்தளவுக்கு நான் இன்னும் வளரவில்லை'' என்று கூறியுள்ளார்.