ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலா, அமீர் படங்களில் நடித்து வளர்ந்து வந்தபோது அஜித், விஜய் என எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தேன். ஆனால் இப்போது அவர்கள் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை என்கிறார் கஞ்சாகருப்பு.
அதுகுறித்து அவர் கூறுகையில், நான் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானபோதும், டைரக்டர் ஷங்கர் தயாரித்த அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தேன். சிம்புதேவன் இயக்கிய அந்த படத்துக்காக முழுமையாக என்னை மாற்றிக்கொண்டு கதாபாத்திரத்தை உணர்ந்த நடித்தேன். எனது நடிப்பைப்பார்த்து விட்டு ஷங்கர் சாரே என்னை பாராட்டினார்.
அதன்பிறகு விஜய் நடித்த சிவகாசி, அழகிய தமிழ்மகன், அஜித்துடன் திருப்பதி என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தேன். ஆனபோதும், தற்போது அவர்கள் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அஜித், விஜய் யாருடனும் நான் சண்டையில்லை. இந்த படத்தில் காமெடிக்கு கஞ்சா கருப்புவை போடு. அவர் பாட்டுக்கு வந்து நடிச்சிட்டு போவார் என்று சொல்ல ஆளில்லை. அதனால்தான் தற்போது நான் எதிர்பார்க்கிறபடி பெரிய படங்கள் கிடைக்கவில்லை.
மேலும், தற்போது என்னை சினிமாவுக்கு கொண்டு வந்த பாலா சாரின் புதிய படத்திலும், அமீரின் சந்தனத்தேவனிலும் நடிக்கிறேன். இந்த படங்களில் எனக்கு ரொம்ப நல்ல வேடம் தந்திருக்கிறார்கள். அதனால், இந்த படங்களுக்குப்பிறகு மறுபடியும் எனது மார்க்கெட் சூடுபிடித்து விடும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கஞ்சா கருப்பு.