காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
ஷமயாலயா கிரியேசன் தயாரித்துள்ள படம் முப்பரிமாணம். அதிரூபன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தனு, சிருஷ்டி டான்கே, தம்பி ராமைய்யா, லொள்ளு சபா சாமிநாதன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை மார்ச் 3-ந்தேதி ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது சாந்தனு பேசுகையில்,
இந்த படத்தின் கதையை முதலில் அதிரூபன் கொண்டு வந்தார். அப்போது நான் கதைக்குள் சேர்ந்தேன். அதன்பிறகு கேமராமேன் ராசாமதி சேர்ந்தார். பின்னர் ஜி.வி.பிரகாஷ்குமார் கதைக்குள் வந்தபிறகுதான் அடுத்த லெவலுக்கு போனது. எல்லோருக்குமே லைப்பில் ஒரு சரிவு வரும்போது புஷ் பண்ண யாராவது ஒருத்தர் வேணும். அந்த மாதிரி நம்மளை புஷ் பண்றது நம்மளோட பேமிலிதான். எனக்கு என்னோட அப்பா - அம்மா, என் சிஸ்டர், என் மனைவி எல்லோரது சப்போட்டும் இருந்திருக்கு. நான் எதிர்பார்த்த வெற்றி இன்று வரை எனக்கு கிடைக்கலேன்னாகூட என்னை ஆரம்ப காலத்தில் பத்திரிகைகாரர்கள் எந்த லெவலுக்கு தூக்கி வச்சீங்களோ அந்த மாதிரி நடித்த படம் ஓடுதோ இல்லையோ என்னை கொண்டாடுறீங்க.
ஒரு விழாவில் விஷால் சொன்னார், விஷால் படம் ஜெயிச்சா விஷால் ஜெயிச்ச மாதிரி, ஆர்யா படம் ஜெயிச்சா ஆர்யா ஜெயிச்ச மாதிரி. ஆனால் சாந்தனு ஜெயிச்சா, இந்த இன்டஸ்ட்ரியே ஜெயிச்ச மாதிரி என்றார். அந்த அளவுக்கு பொறுமை, திறமை இருக்கு இந்த பையனுக்கு என்றார். நான் நினைக்கிறேன் இந்த பையனோட நிலைமை இந்த படத்தோடு மாறும் என்றார். இப்படி எல்லோருடைய வாழ்த்துக்களும் எனக்கு இருக்கு. இப்ப மட்டும் இல்லை. இன்னும் எத்தனை வருசமானாலும் கடின உழைப்பை நான் கொடுத்துக்கிட்டே இருப்பேன்.
இந்த படம் கண்டிப்பாக எனக்கு பிரேக் கொடுக்கும். நான் ஏன் இவ்ளோ உறுதியாக சொல்றேன்னா, இதுவரைக்கும் நான் பண்ணின படங்களிலேயே ரொம்ப ஸ்ட்ராங்கான கண்டன்ட் உள்ள படம் இந்த முப்பரிமாணம். இனிமே நான் எந்த மாதிரி கதைகள் கதாபாத்திரங்கள் பண்ண வேண்டும் என்பதில் கிளியராக இருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் அதிரூபன் நீங்க ஹீரோ இல்லை ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டா நினைச்சிக்குங்க என்றார். நான் அந்த மாதிரிதான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இனிமேல் நான் பண்ற எல்லா படங்களிலுமே ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்டாதான் மூவ் பண்ணப்போறேன். இன்றைக்கு மக்களோட பாய்ண்ட் ஆப் வீவே மாறிடுச்சு. மக்கள் எதிர்பார்க்கிற ஒரு நடிகராக ஆகனும்னா அவங்க எதிர்பார்க்கிற அவங்க பக்கத்து வீட்டு பையன் மாதிரி மாறனும். அப்பத்தான் அவங்க மனசுல போய் உட்கார முடியும். அப்படி ஒரு கதாநாயகனாக அவங்க மனசுல போய் உட்காரனும்ங்கிறதைதான் நான் எதிர்பார்க்கிறேன்.
இனிமேல் நான் பண்ற படங்களில் நம்ம லைப்ல நடந்த மாதிரி ஒரு விசயத்தை சாந்தனு பண்ணியிருக்கிறாரு அப்படின்னு சொல்ற மாதிரியான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பேன். முப்பரிமாணம் இளைஞர்களுக்கான படம். படம் பார்க்கும் எல்லோருமே நம்ம லைப்லயோ, ப்ரண்டோட லைப்லயோ இந்த மாதிரிதானே நடந்தது என யோசிப்பாங்க. அதோடு, இந்த படம் பார்த்தால் எந்த லவ்வர்ஸ்க்குமே இந்த மாதிரி நடக்கக்கூடாது என நினைப்பாங்க என்றார்.