ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை குறிப்பிடும் வகையில், அதிகாரம் இரண்டு வகை என, நடிகர் கமல் கூறியுள்ளார். அரசியலே வேண்டாம் என, கமல் கூறினாலும், தற்போதைய அரசியல் சூழலில், ஆளும் கட்சியினரை, சமூக வலைதளத்தில் கண்டிப்பதை, நடிகர் கமல் வழக்கமாக கொண்டுள்ளார்.
அரசியல்வாதிகளிடம் இழந்து வரும் சுதந்திரத்தை மீட்க, மற்றவர்களை குறை சொல்வதை விட்டு, நாம் குற்றமின்றி கடமையை செய்வோம் என, இளைஞர்களுக்கு, ஏற்கனவே, கமல் அழைப்பு விடுத்திருந்தார். தற்போது, தமிழக முதல்வராக பன்னீர்செல்வம் தொடர்கிறார். முதல்வராக பதவியேற்க அழைப்பு வராத அதிருப்தியில் உள்ள, சசிகலா, இனி பொறுக்க முடியாது என, கூறியிருந்தார்.
இந்நிலையில், கமல், நேற்று டுவிட்டரில், அதிகாரம் இரண்டு வகைப்படும். ஒன்று, தண்டனை பயத்தால் பெறுவது; மற்றொன்று அன்பால் பெறுவது. என் நாயகன் காந்தி என, குறிப்பிட்டுள்ளார்.