மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்த பிறகு சில துணை நடிகர், நடிகைகள் வாராகி என்பவர் தலைமையில் செயல்பட்டனர். நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனால் 22 பேர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள்.
இதில் 8 துணை நடிகைகள் "நாங்கள் தவறாக வழிநடத்துப்போட்டோம் எங்களை மன்னித்து சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்" என்று கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீண்டும் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது தொடர்பாக நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வாராகி, சங்கையா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 22 உறுப்பினர்களை நடிகர் சங்கத்தின் மீதும், நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மீதும் பொய்யான, அவதூறான குற்றச்சாட்டுகளை பரப்பினார்கள். நடிகர் சங்கத்தின் முன்னால் வந்து நின்று கோஷமிட்டார்கள். அவர்களிடம் பொய்யான கையெழுத்து வாங்கி நீதிமன்றத்தில் வழக்கை வாராகி தொடர்ந்துள்ளார்.
அதை அறிந்த அம்பிகா, ஜெயந்தி, மல்லிகா, மலர்கொடி, தேவி, உஷா, சந்தியா, ராஜாமணி ஆகியோர் நாங்கள் இதை செய்யவில்லை, எங்களிடம் அவர்கள் தவறாக கையெழுத்து வாங்கியுள்ளார்கள். நாங்கள் நிர்வாகிகளுக்கும், நிர்வாகத்துக்கும் எதிராக அவர்களுடைய தூண்டுதலின்பேரில் தான் சத்தம் போட்டோம். நாங்கள் நிர்வாகிகள் மீதோ அல்லது நிர்வாகத்தின்மீது எந்தவித வழக்கும் கொடுக்கவில்லை, ஆகவே எங்களை மன்னித்து திரும்பவும் நடிகர் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளரிடம் கடிதத்தை அவர்கள் கொடுத்தனர்.
அது குறித்து நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதித்து, அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வாராகி அவர்கள் தூண்டுதலால் தொடரப்பட்ட பொய்யான வழக்கிலிருந்து அவர்களை விடுவிக்குமாறு கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.