ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக தியேட்டர்களுக்கு படங்களை கொண்டு வந்து ஓட வைப்பது பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக, முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றால் சிறிய படங்கள் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரே பாணியில் உருவான படங்கள் என்றால், இரண்டு படங்களுமே ஒரே நேரத்தில் வெளியாகும்போது படங்களின் வசூல் பாதிக்கும் என்பதால் அதில் ஏதேனும் ஒரு படம் பின் வாங்கி விடுகிறது.
அந்த வகையில், தற்போது மஞ்சப்பை ராகவா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள கடம்பன் படமும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துள்ள வனமகன் படமும் பழங்குடியின மக்கள் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகியுள்ளன. மேலும், இந்த இரண்டு படங்களுமே தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் கடம்பன் படத்தை வெளியிடுகிறார்கள். ஆனால் சத்தமில்லாமல் வளர்ந்து வந்த ஜெயம்ரவியின் வனமகன் படமும் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது.
அதோடு, இரண்டுமே ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கதைக்களங்களில் உருவாகியிருப்பதால், ஒரே மாதத்தில் இரண்டு படங்களுமே வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால், ஜெயம்ரவியின் வனமகன் படத்தை மார்ச் மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.