ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், ஆமீர்கான் இருவரும் இணைந்து முதல் முறையாக ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தை எடுக்கவே அவர்களுக்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.
இது பற்றி ஷாரூக்கான அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, “25 வருடங்களாக இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியும். ஆனால், நாங்கள் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் இது. ஒரு உற்சாகமான இரவு,” என ஷாரூக் கூறியுள்ளார்.
இந்த ஒரு பதிவை மட்டும் 46000 பேர் லைக் செய்துள்ளனர், 12,000 பேர் ரிடிவீட் செய்துள்ளனர், 3000 பேர் பதிலளித்துள்ளனர். துபாயில் ஒரு நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்ட போது இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று முதலே வைரலாகப் பரவி வருகிறது.