ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம்வாரியர் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜோக்கர் படம் தயாரிக்கப்பட்டது. இதுதவிர, நயன்தாரா நடிப்பில் 'மாயா' எனும் வெற்றிப் படத்தை தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனமும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமானது தான்.
'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக 'மாநகரம்' என்ற படம் உருவாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 'ஹைபர் லிங்க்' எனும் புதிய திரைக்கதை யுக்தியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் சில தினங்களுக்குமுன் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'மாயா' படத்திற்கும் யு/ஏ சான்றிதழ்தான் கிடைத்தது. 'யு/ஏ' சான்றிதழ் பெற்றதால் மாநகரம் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்றாலும், திட்டமிட்டபடி இப்படத்தை மார்ச் 10ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம்.