ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தில் தமிழுக்கு வந்தவர் சோனியா அகர்வால். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர், ஒருகட்டத்தில் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகியிருந்தார். பின்னர், அவர்களது குடும்ப வாழ்க்கையில் விரிசல் விழுந்து பிரிந்த பிறகு மறுபடியும் நடிக்கத் தொடங்கிய சோனியா அகர்வால், ஒரு நடிகையின் வாக்குமுலம், பாலக்காட்டு மாதவன், சாயா ஆகிய படங்களில் நடித்தார்.
இதில், சமீபத்தில் வெளியான சாயா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், தற்போது எவனவன் என்ற படத்திலும் போலீசாக நடிக்கிறார். இதையடுத்து, அகல்யா என்றொரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் சோனியா அகர்வால். சமுதாயத்தில் பெண்களுக்கு நிகழ்ந்து வரும் ஒரு அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் இந்த படத்தில் ஆவேசமான பெண்ணாக நடிக்கிறாராம் சோனியா அகர்வால். தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 20-ந்தேதி முதல் தொடங்குகிறது.