ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‛ஹாரிபாட்டர்' படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் கலைஞர் கிரேக் ப்யூரிட்ஜ், தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரத்தீந்திரன் பிரசாத் ‛இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை புராண கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ‛இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ‛ஜீரோ' உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின், ‛ஜோக்கர்' படத்தில் ஹீரோவாக நடித்த குரு சோம சுந்தரம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ‛கிரேக் ப்யூரிட்ஜ்' படத்தில் சண்டை பயிற்சி அளித்துள்ளார். அதோடு, முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‛ஹாரிபாட்டர்' உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
சென்னை வந்துள்ள அவர் தினமலருக்கு அளித்த பேட்டி:
லண்டனில் சண்டை பயிற்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன். ரெஸ்ட்லிங் போட்டிக்கும் பயிற்சி அளிக்கிறேன். ‛ஹாரிபாட்டர்' உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள எனக்கு ‛இது வேதாளம் சொல்லும் கதை' மூலம் முதல்முறையாக தமிழ் சினிமாவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், நேரில் பார்த்தது இல்லை. தொடர்ந்து நிறைய தமிழ் படங்களில் வில்லனாக நடிக்க விரும்புகிறேன். வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லனாகவும் நடிக்க தயாராக உள்ளேன்.
தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. தமிழர்களின் பாசமும் கலாச்சாரமும் என்னை கவர்ந்துவிட்டது. தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.