ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், சஞ்சய் தத், அர்ஷத் வர்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வெளியான படம் முன்னா பாய் எம்.பி.பி.எஸ். இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு பல விருதுகளையும் வென்றுள்ளது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்போது முன்னாபாய்-3 படமும் உருவாக உள்ளது.
இதுப்பற்றி நடிகர் அர்ஷத் வர்சி கூறியதாவது... "முன்னா பாய்-3 படம் தொடர்பாக இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி என்னிடம் பேசியிருக்கிறார். கதைப்பற்றி சில யோசனைகளும் சொன்னார், அது அருமையாக இருந்தது. இந்தக்காலத்திற்கு ஏற்றபடி மருத்துவதுறையில் நடக்கும் விஷயங்களை பற்றி சொல்ல இருக்கிறோம். சஞ்சய் தத் வாழ்க்கை வரலாற்று படம் முடிந்ததும் முன்னாபாய்-3 படம் ஆரம்பமாகும், 2018-ல் இப்படம் துவங்கும்" என்றார்.
அர்ஷத் வர்சி, நடித்துள்ள ‛இந்திரா படம், அடுத்தவாரம் 17-ம் தேதி ரிலீஸாக இருப்பதால் தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.