ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற மார்ச் 5-ந் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட தேர்தல் அட்டவனைப்படி நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்து நேற்று மாலை போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால், அறிவிக்கப்படவில்லை.
இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் போட்டியிடுகிறார். ஒருவர் இன்னொரு சங்கத்தில் நிர்வாக பொறுப்பில் இருந்தால் அவர் தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக போட்டியிட முடியாது என்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிமுறை எண் 20ல் குறிப்பிடப்பட்டிருப்பதாக கூறி சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இந்த விதிமுறை சங்கத்தின் விதியில் இல்லை. தேர்தல் விதிமுறை என்பது தேர்தலுக்கு தேர்தல் மாறுபடும் எனவே சங்க விதிப்படி போட்டியிடலாம் என்று விஷால் தரப்பினர் கூறினார். இதை ஏற்ற தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதியுமான ராஜஷ்வரன் தேர்தல் விதிமுறை 20 ஐ நீக்கினார்.
இந்த நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில உறுப்பினர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதன் மீதான விசாரணையை வருகிற 14ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இதனால் நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வேட்பாளர் இறுதி பட்டியலை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "நீதிமன்ற உத்தரவு வந்த பிறகுதான் எந்த முடிவும் எடுக்க முடியும்" என்ற தேர்தல் அதிகாரி ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். இறுதி பட்டியல் வெளியிடுவது தள்ளிப்போவதால். தேர்தலும் ஒரு வாரம் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.