மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல்நிலை நிலவி வருகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக நடிகை கவுதமி கூறினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அவரது கேள்விக்கு விடை கிடைக்கவில்லை, இதனால் பிரதமர் மீது தன் அதிருப்தியை தெரிவித்தார். தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதா, இதற்கும் தெருவில் இறங்கி போராட வேண்டுமா...? என்றெல்லாம் கூறியிருந்தார் கவுதமி.
இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறினார். பன்னீர் செல்வத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பாக நடிகை கவுதமி, தன் டுவிட்டரில் பன்னீர் செல்வத்தின் முடிவை வரவேற்றுள்ளார்.
அதன்படி கவுதமி தன் டுவிட்டர் பதிவில், ‛‛இதற்காகத்தான் ஜெயலலிதா, ஓபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்தார். தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர் ஜெயலலிதா, தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காபாற்றினார் ஓபிஎஸ்''என்று கூறியுள்ளார்.