ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் மிகவும் ஆக்டீவ்வாக இருக்கிறார். சமீபகாலமாக தமிழகத்தில் நிலவி வரும் ஒவ்வொரு பிரச்னையின் போது அதுதொடர்பாக பதிவிட்டு வருகிறார். அதேசமயம், அவர் பதிவிடும் சில கருத்துக்கள் யாரையோ மறைமுகமாக சாடுகிறார் என்பது மட்டும் புரிகிறது, ஆனால் அவர் யாரை குறிப்பிட்டு சொல்கிறார் என்பது வெளிப்படையாக சொல்ல மறுப்பது ஏன்.? என்பது மட்டும் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா இறந்த சமயத்தில் ‛‛சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று மட்டும் டுவிட் செய்தார். அதில் ஜெயலலிதா என்று ஒருவார்த்தை கூட பதிவிடவில்லை. இது சர்ச்சையானது.
அதன்பின்னர் அரசியல் பற்றி ஒரு டுவிட் செய்திருந்தார். அதில், களம்புகுந்தோர் களமறியார், களமறிந்தோர் களமிறங்கார், களமிறங்கார் கோழையலர், களத்திரந்தோர் வீரரலர், பிறந்தழிதல் பிழையுமல, நிறையுமல...
இந்நிலையில் தமிழக முதல்வராக இருந்து வந்த ஓ.பன்னீர் செல்வம், நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இச்சூழலில் கமல் டுவிட்டரிலில் நேற்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். அது வள்ளுவன் எழுதிய குரல்...
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
குறள்: இதன் அர்த்தம், ‛‛மிக மெல்லிய மயிலிறகே ஆனாலும், அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் அச்சு முறியும்''. என்பதாகும்.
முதல்வர் பொறுப்பேற்றுள்ள சசிகலாவால் முதல்வர் பதவி என்ற பாரத்தை தாங்க முடியாது என்பதை தான் கமல், இப்படி குறள் மூலமாக மறைமுகமாக சொல்கிறார் என்று பலரும் கருதுகின்றனர்.
தற்போது, தமிழகத்தில் உள்ள அரசியலில் சூழலில் கமல் பதிவிட்டிருக்கும் இந்த பதிவு யாருக்காக...? கமல், அரசியல் சூழலை பற்றி சொல்கிறாரா...?, இல்லை தன் துறை(சினிமா) சார்ந்து சொல்கிறாரா...? என்று தெரியவில்லை. கமல் தான் பதிவிடும் ஒவ்வொரு பதிவையும் ஏன் நேரடியாக சொல்ல தயங்குகிறார், மறைமுகமாக சொல்வது ஏனோ...? அது கமலுக்கே வெளிச்சம்.