மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ஏஎல் அழகப்பன், ஞானவேல்ராஜா, எஸ்ஆர் பிரபு உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்று விஷால் கூறினார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2017-19 ஆண்டுக்கான தேர்தல் வருகிற மார்ச் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க தேர்தலை போன்று தயாரிப்பாளர் சங்கத்திலும் பலமுனை போட்டி நிலவுகிறது. நடிகர் சங்கத்தை எப்படி விஷால் தலைமையிலான இளம் அணியினர் கைப்பற்றினார்களோ அதேப்போன்று தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று விஷால் தரப்பு களம் இறங்க முடிவெடுத்தது. ஆனால், இடையில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை விஷால் விமர்சித்ததாக கூறி அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது தயாரிப்பாளர் சங்கம். இதனால், விஷால் போட்டியிட முடியாத சூழல் உருவானது. விஷாலுக்கு பதிலாக நடிகை குஷ்புவை களமிறக்க முடிவு செய்யப்பட்டு அதுதொடர்பான செய்திகளும் வெளியாகின. இதற்கிடையே, விஷால் தன் மீதான தடையை நீக்க சொல்லி சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் விஷால் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்தும், கோர்ட்டின் உத்தரவுபடியும் விஷால் மீதான சஸ்பெண்ட்டை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. இதனால் விஷாலுக்கு பெரிய விடுதலை கிடைத்தது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு கமல் முன்மொழிய விஷால் நேற்று மனு தாக்கல் செய்தார். இன்று மனு தாக்கல் செய்ய கடைசிநாளில் விஷால் அணியினர் ஒட்டுமொத்தமாக பல்வேறு பதவிகளுக்கு மனு தாக்கல் செய்தனர். அதன்படி, தலைவர் பதவி(விஷால்) தவிர்த்து துணை தலைவர் பதவிக்கும் தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனும், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும், செயலாளர் பதவிக்கு ஞானவேல் ராஜாவும், பொருளாளர் பதவிக்கு எஸ்ஆர் பிரபுவும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் மனு தாக்கல் செய்தனர்.
பதவி ஆசையில்லை : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால்... பதவி ஆசைக்காக தேர்தலில் போட்டியிடவில்லை. தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே நிற்கிறோம். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் சினிமாவில் அனைத்து துறைகளும் சிறப்பாக இருக்கும். பதவியில் இருந்தால் மட்டுமே நல்லது செய்ய முடியும் என்ற சூழல் வந்துவிட்டது, அதனால் தான் போட்டியிடுகிறோம். , நாங்கள் கொடுத்த வாக்குறுதியை ஓராண்டுக்குள் நிறைவேற்றாவிட்டால் உடனே பதவியை விட்டு விலகுவோம் என்று கூறியுள்ளார்.
பிரகாஷ்ராஜ் பேசும்போது... சிறு தயாரிப்பாளர்களுக்கு நல்ல நடக்க வேண்டும், தயாரிப்பாளர் சங்கத்தில் நிச்சயம் மாற்ற வேண்டும் என்றார்.