வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
பாலிவுட்டின் பிரபல நடிகரான அர்ஷத் வர்சி, தான் நடித்துள்ள இரடா படத்தை புரொமோஷன் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற புரொமோஷன் ஒன்றில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது நடந்த தாக்குதல் குறித்து மனம் திறந்தார்.
அவர் பேசுகையில், சினிமா துறையில் இருந்து அரசுக்கு அதிகப்படியான வரி போகிறது. ஆனால் எங்களைப்போன்ற சினிமாக்காரர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எப்போதுமே எங்களை குறிவைத்தே தாக்குதல் சம்பவம் நடக்கிறது. இதை யாரும் கண்டு கொள்வது கிடையாது. சஞ்சய் லீலா பன்சாலியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறான விஷயம், இதுபோன்று நடக்க கூடாது. இதுபோன்ற விஷயங்களை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.