ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகம் 'பைரசி'யுடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு 'விஎச்எஸ்' கேசட் இருந்த காலத்தில் புதிய திரைப்படங்கள் வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வீடியோ கேசட்டாக வெளிவந்து அச்சுறுத்தலாக இருந்தது. அதன் பின் கேபிள் டிவி வந்த பிறகு அந்தப் படங்களை அப்படியே கேபிள் டிவியில் ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். விசிடி-க்கு வளர்ந்த பிறகு 'திருட்டு விசிடி' படம் வெளியான ஓரிரு நாட்களில் வெளிவந்தது. கடந்த சில வருடங்களாக பைரசி இணையதளங்கள் மூலம் படம் படங்கள் வெளியானது. படம் வெளியான அன்றே இணையதளங்கள் மூலம் படம் வெளிவர ஆரம்பித்தது திரையுலகத்தை கடுமையாக பாதிக்க வைத்தது. இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் நேரடி ஒளிபரப்பாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்த 'பைரசி' விவகாரம் குறித்து இன்று காலை நடைபெற்ற 'எமன்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா ஆவேசமாகப் பேசினார். எழுத முடியாத கெட்ட வார்த்தையை பயன்படுத்தி திருட்டுத்தனமாக புதிய திரைப்படங்களை வெளியிடும் பைரசி இணையதளத்தை கடுமையாகத் திட்டினார். அவரது தயாரிப்பில் சூர்யா நடித்து அடுத்த வாரம் வெளிவர உள்ள 'சி 3' படத்தை படம் வெளியாகும் அன்றே வெளியிடப் போவதாக அந்த இணையதளம் அறிவித்துள்ளது என்றும் தெரிவித்தார். திரையுலகத்தில் இது பற்றி யாரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அந்த இணையதளத்தை இல்லாமல் செய்துவிடுகிறேன், இது சவால், என்று ஆவேசமாகப் பேசினார்.
ஞானவேல்ராஜாவின் பேச்சு ஆவேசமாக இருந்தாலும் அதில் இருந்த கோபம் நியாயமானது என விழாவுக்கு வந்த பிரபலங்கள் தனிப்பட்டு தங்கள் கருத்துக்களை நம்மிடம் தெரிவித்தார்கள். ஆனால், மேடையில் வேறு யாரும் அது பற்றி பேசவில்லை.
பின்னர் பேசிய விஜய் சேதுபதி, “தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவ்வளவு ஆவேசமாகப் பேசியதில் அவருடைய கோபம் வெளிப்பட்டது. திரையுலகத்தை வெளியில் இருந்து பார்க்கும் போது பலருக்கும் மகிழ்ச்சியாகத் தெரியும். ஆனால், நாங்கள் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. திரையுலகத்தைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையாக இருந்து இப்படி திருட்டுத்தனமாக திரைப்படங்கள் வெளியாவதைத் தடுக்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசி தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க செயலாளருமான டி. சிவா, “திரையுலகத்தில் இருக்கும் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சங்கங்கள் செய்வதை விட சட்டம் சரியாக இருக்க வேண்டும்,” என்றார்.
திரையுலகத்தினர் நினைத்தால் இப்படி திருட்டுத்தனமாக திரைப்பங்கள் வெளியாவதை சட்டத்தின் உதவியுடன் தடுக்க முடியும் என திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். வரும் 9ம் தேதி சுமார் 100 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்துள்ள 'சி 3' படம் வெளியாக உள்ளது. அன்றைய தினமே அந்தப் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவோம் என்று சொல்வது எவ்வளவு துணிச்சலானது என திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசியதற்கு, படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதாக குற்றம் சாட்டப்படும் நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிலையும் வெளியிட்டுள்ளது. “பிப்ரவரி 9ம் தேதி உங்கள் தினம் இல்லை, எங்களது தினம்”, என கூறியுள்ளார்கள்.
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சங்கங்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?.