ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எல்லா ஹீரோக்களும் ரஜினி பட தலைப்பை தேடி ஓடிக்கொண்டிக்கும்போது சிபிராஜ் தனது படத்திற்கு கமல் தலைப்பு வைத்துள்ளார். 1988ம் ஆண்டு வெளிவந்த சத்யா படத்தில் கமல்ஹாசன், அமலா நடித்திருந்தார்கள். க்ரைம் த்ரில்லர் படம். "வளையோசை கல கல வென கவிதைகள் படிக்குது..". பாடல் மூலம் அன்றைய யூத்துகளை பஸ் படிக்கட்டில் பயணிக்க வைத்த படம்.
இந்த படத்தின் தலைப்பைத்தான் தற்போது தான் நடித்து வரும் படத்திற்கு வைத்துள்ளார் சிபிராஜ். இந்தப் படத்தை சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. சைத்தான் படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சிபிராஜுடன் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ் நடிக்கிறார்கள். சிமோன் இசை அமைக்கிறார். அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.
கட்டப்பாவை காணோம் படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார் சிபிராஜ். சத்யா தலைப்பு கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்திடம் உள்ளது. அதனை சிபிராஜ் முறைப்படி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படமும் பழைய சத்யா பாணியிலான க்ரைம் திரில்லர் என்கிறார்கள்.