ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுந்தரபாண்டியன் வெற்றிப் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அதன் பிறகு இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை இயக்கினார். அது தோல்வி படமானது. சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சத்ரியன் படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன், சரத் லோகித்தாஸ், ஐஸ்வர்யா தத்தா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சத்ரியன் படம் தாமதமானது ஏன் என்பதற்கு எஸ்.ஆர்.பிரபாகரன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
இது கதிர்வேலன் காதல் படத்தை முடித்ததும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்துக்கு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண கமிட் ஆனேன். ரஜினிமுருகன் படம் ஆரம்பிக்கவே தாமதமானது. எனவே நாங்களும் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. இனிமேலும் தாமதித்தால் சரிவராது என்று சத்யஜோதி பிலிம்ஸில் இருந்து வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்.
சத்யஜோதிகிட்ட விக்ரம்பிரபு கால்ஷீட் இருந்தது. விக்ரம்பிரபு வாகா, வீரசிவாஜி இரண்டு படங்களில் பிஸியா இருந்தார் நான் அவருக்கு சொன்ன கதைக்கு கெட்அப் மாற வேண்டியிருந்ததால அந்த இரண்டு படங்கள் முடித்துவிட்டுதான் வர வேண்டியதாகிவிட்டது. லேட்டானாலும் கூட நான் நினைச்ச ஒரு படத்தை எடுத்துள்ளேன் என்கிற திருப்தியை சத்ரியன் கொடுத்துருக்கிறது. இந்த தாமதம் சினிமாவில் சகஜம் தானே?
நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கிறது. உதயம்,அமரன் போன்ற நிறைய கேங்ஸ்டர் படங்கள் இங்கு பதிவாகியிருக்கிறது. ஆனால் இந்த படங்கள் ஒரு சினிமாவாகத்தான் காட்சிபடுத்திருப்பாங்க அமரன்ல கொஞ்சம் இயல்பு வாழ்க்கையை பதிவு பண்ண முயற்ச்சி பண்ணினாங்க, நான் ஒரு கேங்ஸ்டரை சினிமாவாக இல்லாமல், அவங்களுக்கு நெருக்கமா நின்னு ஒரு வாழ்க்கையாக அழுத்தமாக பதிவு பண்ணியிருக்கேன்.
இந்த சத்ரியன் படத்துல சினிமா தனமான கேங்ஸ்டர் எந்த பிரேம்லயும் பாக்கமாட்டீங்க. ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கையில் என்னென்ன நடக்கும் அதை எப்படி எதிர் கொள்வார்கள் என்பது தான் படத்தில் இருக்கும். எந்த பிரேம்லயும் ஹீரோ தெரிய மாட்டார். குணா என்கிற இளைஞன் தான் தெரிவார். நம்ம ஊரோட தன்மை, கலாச்சாரம், பழக்கவழக்கம், வாழ்வியல தான் பதிவு பண்ணியிருக்கேன் என்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.