ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜோதிகா வடநாட்டு பொண்ணு. தமிழில் நடிக்க வந்த பிறகு தமிழ் பேசவும், புரிந்து கொள்ளவும் கற்றுக் கொண்டார். ஆனால் படத்திற்கு டப்பிங் பேசுகிற அளவிற்கு சுத்தமாக தமிழ் பேசத் தெரியாது. 2005ம் ஆண்டு வெளிவந்த மாயாவி படத்தில் அவர் வடநாட்டிலிருந்து வந்த நடிகையாகவே நடித்ததால் அவரது அரைகுறை தமிழ் பொருத்தமாக இருக்கும் என்று சூர்யா அதில் டப்பிங் பேச வைத்தார்.
அதன் பிறகு அதாவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மகளிர் மட்டும் படத்திற்கு டப்பிங் பேசியுள்ளார். படத்தில் ஜோதிகாவுக்கு விருதுக்கான வாய்ப்புகள் இருப்பதால் அவர் டப்பிங் பேசினால்தான் விருது கிடைக்கும் என்பதால் இயக்குனர் ஜி.பிரம்மா அவரை டப்பிங் பேச வைத்துள்ளார். மேலும் சூர்யா வீட்டில் எல்லோரும் தமிழ் பேசுவதால் ஜோதிகாவுக்கு தமிழ் சரளமாக பேச வரும். அதனால் பேசி விட்டார்.
மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா ஒரு ஆவண பட இயக்குனராக நடித்துள்ளார். நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அவர் ஆவண படமாக இயக்கும்போது அவர் சந்திக்கும் பிரச்னைகளும் அதனை அவர் எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதும் தான் கதை. ஊர்வசி, சரண்யா, பானுப்ரியா, நாசர், லிவிங்ஸடன், பாவேல் நவநீதன், கோகுல் ஆகியோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. மார்ச் 8ந் தேதி மகளிர் தினத்தில் வெளிவரலாம் என்று தெரிகிறது.