ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார் நடித்த தாரைத்தப்பட்டை படத்தை அடுத்து குற்றப்பரம்பரை கால கட்டத்தில் நடந்த ஒரு கதையை பாலா இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு அந்த படத்தில் நடிக்க அரவிந்த்சாமி, விஷால், ஆர்யா, அதர்வா, ராணா என பல முன்னணி நடிகர்களிடமும் அவர் பேசி வைத்திருந்தார். அப்போது தான் இயக்கயிருக்கும் குற்றப்பரம்பரை கதையைத்தான் பாலா படமாக்குகிறார் என்று அதற்கு பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர்களுக்கிடையே மோதல் வெடித்து அந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
அதையடுத்து, அந்த படத்தை தொடங்கும்போதே பிரச்சினை ஏற்பட்டதால், வேறு கதையை இயக்கும் முயற்சியில் இறங்கிய பாலா, அந்த படத்தில் நடிக்க சாட்டை யுவன், சூப்பர் சிங்கர் பாடகி பிரகதி ஆகியோரை ஒப்பந்தம் செய்தார். அப்படம் படம் பிராமணர் சம்பந்தப்பட்ட கதையில் தயாராகயிருப்பதாக செய்திகள் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் தற்போது அந்த படம் குறித்து விசாரித்த போது, தனது புதிய படத்தை பிராமண பெண்ணுக்கும், தேவர் பையனுக்குமிடையே உருவாகும் காதலை மையப்படுத்தி பாலா இயக்கயிருப்பதாக கூறப்படுகிறது.