மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'வாலு' படத்தை தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'பிரேமம்' மலையாளப் படத்தின் நாயகியான சாய் பல்லவி நடிக்க இருந்தார். இப்போது இந்த படத்திலிருந்து சாய் பல்லவி விலகி விட்டார். இதற்கு காரணம் விக்ரம் என்று குற்றம் சாட்டுகிறது விஜய் சந்தர் தரப்பு.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சாய் பல்லவியிடம் கதை சொல்லி அவரது சம்மதத்தைப் பெற்றிருந்தாராம் விஜய் சந்தர். அவர் சொன்ன கதையில் இம்ப்ரஸ்ஸாகித்தான் அவர் கேட்ட தேதிகளில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ள சம்மதித்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் சாய் பல்லவி. இடையில் கௌதம் மேனன் புகுந்து குட்டையைக் குழப்பிவிட்டிருக்கிறார்.
சூர்யாவிடம் சொல்லி ரிஜக்ட் ஆன துருவ நட்சத்திரம் கதையை விக்ரமிடம் சொல்லி இருக்கிறார் கௌதம் மேனன். சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் உள்ள பகையை அறிந்து சரியாக பந்தைப் போட்டிருக்கிறார். அவர் நினைத்ததுபோலவே சூர்யாவை வெறுப்பேற்றுவதற்காகவே துருவ நட்சத்திரம் கதையில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் விக்ரம்.
அது மட்டுமல்ல, விஜய் சந்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை தள்ளி வைக்கச் சொல்லிவிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதன் காரணமாக, சாய்பல்லவி கொடுத்த தேதிகளில் விஜய் சந்தர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நடக்க வாய்ப்பில்லாமல் போனது. அதனால்தான் விக்ரம் நடிக்கும் படத்தில் இனி நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லுமளவுக்கு கடுப்பாகிவிட்டிருக்கிறார் சாய்பல்லவி. இந்தப் பஞ்சாயத்து காரணமாகத்தான், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் படம் சாய் பல்லவின் முதல் தமிழ்ப்படமாக வெளிவரவிருக்கிறது.