Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குணசித்ர நடிகையாக வேண்டும் என்பதே ஆசை! -ஜாங்கிரி மதுமிதா பேட்டி

24 ஜன, 2017 - 09:25 IST
எழுத்தின் அளவு:
i-like-to-do-character-roles-only-says-actress-madhumitha

ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தவர் மதுமிதா. அதையடுத்து 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டவர் தற்போது, சரவணன் இருக்க பயமேன், மோகினி, கொஞ்சம் கொஞ்சம் உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


புதிய படங்களிலும் காமெடி வேடங்களில்தான் நடிக்கிறீர்களா?


காமெடி பீசாகவே என்ட்ரியாகி காமெடியாகவே பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆனபோதும், ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தில் டோட்டலாவே காமெடி இல்லாமல் சீரியசான வேடத்தில் நடிக்க வைத்தனர். நன்றாக நடித்திருந்ததாக நிறையபேர் சொன்னார்கள். அதனால் தொடர்ந்து காமெடி மட்டுமின்றி சீரியஸ் உள்பட மாறுட்ட வேடங்களை எதிர்பார்க்கிறேன்.


மேலும், வில்லேஜ் வேடங்களில் நடிக்க ஆசை. காரணம் நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அதனால் வில்லேஜ் பெண்ணாக, பாவாடை தாவணி கட்டிக்கிட்டு நடிக்க ஆசையாக உள்ளது. அதோடு வில்லேஜில் தங்கி கிராமத்து படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அங்குள்ள வயல்வெளி, பம்பு செட்டையெல்லாம் பார்த்து ரசிக்க வேண்டும் என்று எனக்கு மனசு நிறைய ஏகப்பட்ட ஆசைகள் உள்ளன. குறிப்பாக, எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து நல்லதொரு குணசித்ர நடிகையாக வேண்டும் என்பதே எனது ஆசை.


சந்தானம் படங்களில் இப்போது நடிக்கவில்லையே?


ஒரு கல் ஒரு கண்ணாடி, வாலிப ராஜாவில் நடித்தேன். ஆனால் அவர் ஹீரோவான பிறகு அவர் படங்களில் எனக்கு அழைப்பு வரவில்லை. வருத்தமாக உள்ளது. சந்தானம் படங்களில் என்ன வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். சந்தானத்தை எனக்கு காமெடியனாக பிடித்திருந்தது. ஆனால் இப்போது ஒரு ஹீரோவாகப் பார்த்து இன்னும் ரொம்ப பிடித்து விட்டது. அப்படியொரு காமெடியான இப்படியொரு ஹீரோவாக முழுவதுமாக மாறி விட்டார் என்பதைப்பார்க்கையில் ஆச்சர்யமாக உள்ளது. முதலில் ஸ்டைலிசாக நடனத்தில் அசத்தியவர், பின்னர் தில்லுக்குத்துட்டு படத்தில் ஆக்சனிலும் அசத்தி விட்டார். அந்த அளவுக்கு அவர் தன்னை தயார்படுத்தியிருக்கிறார். அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அடுத்தடுத்த படங்களில் இன்னும் அதிரடியான சந்தானத்தை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அப்படி அவர் நடிக்கிற படங்களில் நானும் எதாவது ஒரு வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.


சூரியுடன் நடித்தது பற்றி?


முதலில் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்தேன். அண்ணி கேரக்டர். பின்னர் வெள்ளைக்கார துரை. இப்போது சரவணன் இருக்க பயமேன் படத்தில் மீண்டும் சூரியுடன் நடித்துள்ளேன். அவருடன் நடித்தது நல்ல எக்ஸ்பீரியன்ஸ். என்கரேஜ் பண்ணுவார். ஏதாவது கவுண்டர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அதேபோல், விவேக் சார், முதலில் மச்சான் படத்தில் அவருடன் நடித்தேன். பின்னர் காஷ்மோராவில் அவரது பெண் ணாக நடித்தேன். நல்லதொரு அட்வைசர். அவரிடம் எல்லாமே தெரிஞ்சிக்கலாம். நல்ல சொலிசன் சொல்வார். அவருடன் பேசிக்கொண்டிருந்தால் பாசிட்டீவா பீல் பண்ணுவோம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த ஒரு மனிதர் அவர்.


நடிப்பில் யாரை பாலோ பண்றீங்க?


மனோரமா ஆச்சி எல்லா வேடங்களும் பண்ணினாங்க. அதே மாதிரி எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க விரும்புகிறேன். எந்த மாதிரியான வேடமாக இருந்தாலும் அதில் எப்படி நாம ஈடுபடுத்திக்கிறோம் என்பதுதான் முக்கியம். மனோரமாவை பாலோ பண்றேன். அவர்களை மதிக்கிறேன். அவங்க இல்லாதது ரொம்ப வருத்தமாக உள்ளது. அவங்க இடத்தை தொட முடியாது. அந்த வழியில போகவாவது செய்யலாமே என்று நினைக்கிறேன். மேலும், அவங்க நடித்தபோது இருந்தது போன்று இப்போது லேடீஸ்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதோடு, ஹீரோவ புக் பண்ணினதும் அடுத்து, காமெடியனைதான் புக் பண்றாங்க. அதேபோல் பீமேல் காமெடியன்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அந்தநிலை வரவேண்டும்.காஷ்மோரா படத்தில் தங்கை வேடம் கொடுத்தது பெரிய விசயம். கார்த்தி சாருக்கு நன்றி சொல்றேன். கண்டிப்பா நீ நடிக்கனும் என்று அவர் சொன்னதாக சொன்னார்கள். ரொம்ப சந்தோசப்பட்டேன். நடிகர் சங்கம் யாருடைய கையில் இருந்தாலும் பெண்களுக்கும் வெள்ளித்திரையில் வாழ்க்கை தரனும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


நளினியுடன் நடிப்பது பற்றி?


அவங்களை 5 வருடமாக தெரியும். ரொம்ப நல்ல அம்மான்னு சொல்லலாம் என்னைப்பொறுத்தவரை நிறைய சொல்லிக்கொடுத்திருக்காங்க. எப்படி நடந் துக்கனும். எப்படி பேசனும். எப்படி டிரஸ் பண்ணனும். எப்படி ஹேர் ஸ்டைல் பண்ணனும் என எனக்கு சொல்லிக்கொடுத்தவர் நளினி மேடம்தான். என்னை எப்படி செதுக்கனும்னு கற்றுக்கொடுத்தவர்.


சீரியல்களை தவிர்க்கிறீர்களா?


இப்போது சின்ன பாப்பா பெரிய பாப்பா மட்டுமே நடிக்கிறேன். வேறு சீரியல்கள் வருகிறது. ஆனால் நான் தவிர்க்கிறேன். முக்கியமாக சீரியஸ் வேடங்களாக வருது. சீரியலில் சீரியஸ் ரோல் பண்ண விரும்பவில்லை. சினிமாவில்தான் சீரியஸ் வேடங்களை எதிர்பார்க்கிறேன்.


சினிமாவில் நடித்த அழுத்தமான வேடங்கள்?


ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓகே ஓகே படம் ஒரு அடையாளம் கொடுத்தது. பெரிய ஆட்களுடன் நடிக்கும்போது கைகால் உதறியது. ஆனால் அந்த படத்தில் நல்ல ரீச் கிடைத்தது. இதற்குதானே ஆசைப்பட்டா பாலகுமாரா. காமெடி கிடையாது. ஆனால் சரியான காமெடியாகி விட்டது. ராஜராணி ரெண்டே சீன்தான். இந்த மாதிரி பேசி நடிக்கனும் என சுளுக்கெடுத்திட்டாரு டைரக்டர். அதுவும் சூப்பர்தான். ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு எக்ஸ்பீரியன்ஸ்.


எந்தமாதிரியான காமெடியை ரசிகர்கள் அதிகமாக ரசிக்கிறார்கள்?


நாகேஷ், வடிவேலு பாடிலாங்குவேஜ் காமெடி செய்தனர். ஆனால் இப்போது டயமிங் காமெடியாகி விட்டதே. பாடிலாங்குவேஜ் காமெடி எப்படி எல்லோருக் கும் வராதோ அதேபோல் டயமிங் காமெடியும் எல்லோருக்கும் வராது. என்னைப் பொறுத்தவரை எது பண்ணினாலும் ஆடியன்ஸ்க்கு பிடித்திருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.


யாரை போட்டியாக நினைக்கிறீர்கள்?


வேலை சரியாக இருந்தாதான் போட்டி இருக்கும். வேலையே இல்லாதபோது யாருடனும் போட்டி போடுவது. ஒரு காமெடியனுக்கே வேலை இல்லை. நான் யாரு டன் போயி போட்டி போடுவது. ஹீரோயினிகளுடன் நான் போட்டி போட முடி யாது. என்னை வளர்த்துக்கிறது பற்றி யோசிக்கத்தான் டயம் சரியாக உள்ளது.மேலும், சினிமாவில்தான் முழுசாக கவனம் செலுத்துகிறேன். அடுத்த லெவலுக்கு செல்ல வில்லேஜ் வேடங்கள் பண்ணுவேன். வில்லி வேடங்கள் பண்ணவும் ஆசைப்படுகிறேன். எனது கண்கள் உருட்டி மிரட்டி நடிக்க சூப்பராக இருக்கும் என்கிறார்கள். அதற்கான வாய்ப்புகள் இன்னும் வரல.


ஜாங்கிரி எப்படி வந்தது?


ஒரு கல் ஒரு கண்ணாடியில் சந்தானம் சார் ஜாங்கிரி அம்முக்குட்டி என்று சொல்வாரே அதன்பிறகுதான் மதுமிதாவுடன் ஜாங்கிரி ஒட்டிக்கொண்டது. இதுவரை 15 படங்கள் பண்ணிட்டேன். முதல் படத்தை மிஞ்சின காமெடி பண்ணவில்லையோ என்ற வருத்தம் உள்ளது. அதை முறியடிக்கும் வகையில் நடிக்க வேண்டும். அந்த பெயரை கொடுத்த அனைவருக்குமே நன்றி. அதை விட நல்ல ரோலில் நடித்து மதுமிதா என்ற பெயரை நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். குறிப்பாக, ஆச்சி மனோரமா போன்று காமெடி, செண்டிமென்ட் மற்றும் வில்லி என அனைத்து விதமான வேடங்களில் ஸ்கோர் பண்ண வேண்டும் என்பதே எனது சினிமா லட்சியமாக உள்ளது.


தமிழில் தவிர வேறு எந்தெந்த மொழிகளில் நடிக்கிறீர்கள்?


ரெட் அலாட் என்ற தெலுங்கு படத்தில் ஆலியுடன் நடிக்கிறேன். தெலுங்கில் ஆர்ட்டிஸ்ட் நல்லா நடிச்சா அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. டேலன்ட் இருந்தா கேப் விடாம சான்ஸ் கொடுப்பாங்க. தெலுங்கில் அதுதான் பெரிய விசயம். அதனால் தமிழைப்போலவே தெலுங்கிலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.தமிழில் ஒரு படத்தில் நடிக்க வைத்தால் அடுத்த படத்திற்கு அதே டைரக்டர் யூஸ் பண்ண மாட்டார். ஆனால் தெலுங்கில் அப்படியல்ல. அதே நடிகர் நடிகை களை அடுத்தடுத்த படங்களுக்கும் நடிக்க வைப்பார்கள். கதைதான் வெவ்வேறாக இருக்கும். அதேபோல் தமிழிலும் என்னைப்போன்ற நடிகை களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்கிறார் மதுமிதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in