ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சாலை பக்கம் மணலில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களில் பலர் விரட்டப்பட்ட நிலையில், மேலும் பலர் கடலை நோக்கி சென்று போராட ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு பக்க பலமாக மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... “யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும், அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்”. என்று கமல் கூறியுள்ளார்.