ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரைப்படத் துறையினர் பல்வேறு வகையில் தங்களது கருத்தை பதிவு செய்து வருகிறார்கள். திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஏ.பி.ஸ்ரீதர் புகழ்பெற்ற ஓவியர். கமல்ஹாசனின் வாழ்க்கையை ஓவியமாக வரைந்தவர். 3டி ஓவியத்தை அறிமுகப்படுத்தியவர். சென்னையில் நிரந்தர கேமரா கண்காட்சி நடத்துகிறவர். அவர் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு தொடர்பான 18 வகையான வண்ண கோட்டோவியம் வரைந்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களின் 5 ஆயிரம் ஆண்டுகால பாரம்பரியம். இந்த மண்ணோடு தொடர்புடைய வழிபாடு. மிருகவதை என்ற காரணத்தை சொல்லி அதனை தடை செய்வது தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். எல்லோரும் அவரவர்கள் அறிந்த வகையில் ஜல்லிக்கட்டுக்கு தங்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். நான் ஒரு ஓவியன் எனக்கு தெரிந்த கலையின் மூலம் ஜல்லிக்கட்டு தொடர்பாக 18 ஓவியங்களை வரைந்து வெளியிட்டுள்ளேன். என்றார்.