ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும், தமிழ்நாட்டைச் சேராத நட்சத்திரங்களில் நயன்தாரா மட்டுமே வெளிப்படையாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் அறிமுகமாகி தற்போது வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஒருவர் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இதுவரை எந்த ஒரு டிவீட்டையோ கூடப் பதிவு செய்யவில்லை.
மலையாளத்திலிருந்து மம்முட்டி, நிவின் பாலி, தெலுங்கிலிருந்து மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஹிந்தியிலிருந்து அக்ஷய் குமார், கன்னடத்திலிருந்து சில ஹீரோயின்கள் என பலர் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நடித்துள்ள படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. இருந்தாலும் தமிழ்நாட்டில் இவ்வளவு பெரிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இது பற்றி தங்களதுக்கு எதுவுமே தெரிய வராதது போல இருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் பலராலும் 'தல' என கொண்டாடப்பட்டு வரும் அஜித்தே அமைதியாக இருக்கும் போது மற்ற மொழி நடிகர்களுக்கு இந்த உணர்வு எப்படி வரும் ?.