ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கேரள மாநில அரசியல்வாதிகளின் எளிமை என்பது நாடறிந்த விஷயம். நம் ஊர் இளைஞர்கள் பார்த்து ஏங்கும் விஷயம். அந்த எளிமையை நேரில் கண்டு அந்த பிரமிப்பில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார் நடிகர் சூர்யா. நேற்று முன்தினம் கேரளாவில் 'சி-3' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக கோவையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பிளைட்டில் சென்றார் சூர்யா. ஏதேச்சையாக அந்த பிளைட்டில் தான் கேரள முதல்வர் பிணராயி விஜயனும் பயணித்துள்ளார்.
பிளைட்டில் ஏறிய கேரள முதல்வர் நேராக வசதிகள் சற்று குறைவான எகனாமி கிளாசில் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். மேலும் திருவனந்தபுரத்தை பிளைட் அடைந்ததும், மற்ற பயணிகள் அனைவரும் இறங்க வழிவிட்டு ஒதுங்கி, தனக்கான வரிசையில் இருந்து நகரும் நேரம் வரும் வரை காத்திருந்து அதன்பின்னரே பிளைட்டில் இருந்து இறங்கியுள்ளார்.. இந்த எளிமையை நேரில் கண்ட சூர்யா மிரண்டுபோனார்..
பின் திருவனந்தபுரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சூர்யா, “கேரள அரசியல்வாதிகளின் எளிமை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.. எங்களது முன்னாள் சி.எம் மறைவுக்கு கூட கேரளா முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், கேரள கவர்னர் அனைவரும் ஒரே காரில் வந்து, அஞ்சலி செலுத்திவிட்டு ஒரே காரில் சென்றார்கள். ஆனால் அந்த எளிமையை இப்போது வெகு அருகில் பார்த்து பிரமித்துப்போனேன்.. கேரள முதல்வர் பிளைட்டில் என் எதிரில் நடந்து வருவதை பார்த்தபோது எங்கள் பள்ளி ஹெட்மாஸ்டர் வருவது போலவே தோன்றியது, அவ்வளவு எளிமையாக இருப்பது என்னை என்னவோ செய்துவிட்டது” என நெகிழ்ந்து கூறியுள்ளார்.